புதிய அரசாங்கத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிதியமைச்சில் இன்று திங்கட்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
இன்று காலை 10.16 மணியளவில் மத வழிபாடுகளுக்குப் பிறகு பிரதமர் நிதியமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வின்போது ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துகொண்டதோடு நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இப்பதவியேற்பின் போது, இந்த முக்கிய நிகழ்வின் அடையாளமாக மத்திய வங்கி ஆளுநரின் ஊடாக பிரதமருக்கு புதிய 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்றை வழங்கிவைக்கப்பட்டது.
Post a Comment