தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான கலையரசன் நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர் தவசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதிநிதியாகச் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு உள்ள அவர், சட்டங்களின் பிரகாரம் சத்தியப்பிரமானத்திற்கு முன்பே தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்யவேண்டும் என்பதற்காக இராஜினாமாச் செய்துள்ளார்.
கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தோல்வியடைந்தது மாத்திரமல்லாமல் தமிழ்ப்பிரதிநிதித்துவமும் இழக்கப்பட்டிருந்தது.
அதனால் த.தே.கூட்டமைப்பிற்குக்கிடைக்கப்பெற்ற ஒரேயொரு தேசியபட்டியல் ஆசனத்தை பலத்த உட்கட்சிச் சர்ச்சைக்கு மத்தியில் கலையரசனுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment