யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு கடல்வழியாக சட்டவிரோதமான முறையில் பெருந்தொகையான தங்கத்தை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை காலை அனலைதீவு கடற்பகுதியில் வைத்தே அவர்கள் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது சுமார் 6 கோடியே 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
மாதகல் பகுதியைச் சேர்ந்த இருவரும் தரகு பணத்துக்காக இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் காங்கேசன்துறை கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த இருவரையும் யாழ்.சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீட்கப்பட்ட தங்கத்தையும் சுங்க தினைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
Post a Comment