முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலைத்தில் இருந்த 3 கர்ப்பிணி பெண்கள், யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து வருகைதந்த 256 பேர், ஓகஸ்ட் 9 ஆம் திகதியன்று, கேப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலைத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களில் மூன்று கர்ப்பிணி பெண்கள், மகப்பேற்று காலம் நெருங்கிய காரணத்தால், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment