யாழ்.பருத்தித்துறை கடலில் இன்று புதன்கிழமை அதிகாலை மிதந்து வந்த 294 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை யினர் தெரிவித்தனர்.
பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது பொதிகள் கடலில் மிதந்து வந்ததை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.
குறித்த பொதிகளை கடற்படையினர் சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா போதைபொருள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அதனை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பொதிக்குள் 294 கிலோ எடை உடைய கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் அனைத்தும் பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Post a Comment