தமிழர்களுக்கான தீர்வினை தருவதற்கு அரசு அல்லது சிங்கள சமூகம் தயாரில்லை என்றால் தமிழர்கள் தனித்துவமான இனமாக, தாங்கள் தங்களுக்கே உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், பிரிந்து செல்வதற்கான பொதுசன வாக்கேடுப்பை நடத்த நீங்கள் தயாரா?
இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்று உறுப்பினரும், வேட்பாளருமான சிவஞானம் சிறிதரன் சவால் விடுத்துள்ளார்.
உருத்திரபுரத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
சிங்கள பேரின வாத அரசும் பேரின வாத தேரர்களும் தமிழர்கள் மீது தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மீதும் அவதூறு செய்து வருகிறார்கள், பேரின வாதத்தை கக்கிவருகிறார்கள்.
தமிழ்ர்களுக்கு எதனையும் வழங்க தயார் இல்லை என்கிறார்கள். இந்த மாதத்தில் மட்டும் பல்வேறு இன வாத அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள்.
மகிந்த ராஜ பக்சவை நான் நேரடியாகக் கேட்கின்றேன். நீங்கள் எங்களுக்கு ஒரு தீர்வைத்தர தயாராக இல்லை என்றால் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சனைகளைப் புரிந்து அவர்களின் இழந்து போன இறமையின் அடிப்படையில் அவர்களுக்கு ஒரு தீவை தருவதற்கு உங்களுடைய அரசு அல்லது சிங்கள சமூகம் தயாரில்லை என்றால் தமிழ்ர்கள் தனித்துவமான இனமாக தாங்கள் தங்களுக்கே உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து செல்வதற்கான பொதுசன வாக்கேடுப்பை நடத்த நீங்கள் தயாரா?
இவை எதனையும் தரமுடியாது என்றால் பிரிந்து செல்வதற்கான பொதுசன வாக்கேடுப்பை நடத்த நீங்கள் தயாராகுங்கள்.
வடக்கிலும் கிழக்கிலும் வாழுகின்ற தமிழர்கள் தாங்கள் சிங்கள தேசத்தோடு சேர்ந்து வாழ முடியுமா? சிங்கள மக்களோடு எனியும் ஒற்றுமையாக இருக்க முடியுமா? சிங்கள தலைவர்களின் ஆட்சியின் கீழ் இருக்க முடியுமா? என்பதற்கு நாங்கள் ஜனநாகய ரீதியாக வாக்களிக்க தயார்.
ஆகவே எங்களிடம் நீங்கள் வாக்களிப்பை நடத்துங்கள். நாங்கள் அந்த வாக்களிப்பை செய்து நாங்கள் ஒரு தனித்துவமாக எங்களின் சுயநிர்னய உரிமையின் அடிப்படையில் எங்களின் பூர்வீக தாயகத்தின் அடிப்படையில் எங்களுக்கே உரித்தான தமிழ்த் தேசிய உரிமைகளின் அடையாளங்களோடு நாங்கள் பிரிந்து செல்ல தயாராக இருக்கின்றோம். அப்படியானால் நீங்கள் அதற்கு தயாரா அப்படியனால் உடனே வடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்துங்கள் என்றார்.
Post a Comment