கொழும்பு, நுகேகொட மேம்பாலத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார்.
இவ்விபத்தில் படு காயமடைந்த மேலும் 2 இராணுவத்தினர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இராணுவத்தினர் பயணம் செய்த வாகனம் ஒன்று பஸ் ஒன்றுடன் மோதியபோதே விபத்தில் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ வாகனத்தின் சாரதியே விபத்தில் பலியாகியுள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து நுகேகொட பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Post a Comment