யாழ்.உரும்பிராய் பகுதியில் கஞ்சா போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இதன் போது கைது செய்யப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
உரும்பிராய் பகுதியில் போலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான இளைஞர் ஒருவரை போலிசார் சோதனையிட்டுள்ளனர்.
இதன் போது அவரின் உடமையில் இருந்து 4 கிராம் கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர் சான்றுப் பொருளுடன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் உரும்பிராய் செல்வபுரம் பகுதியில் வைத்து “சாதா”என்ற போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பிறிதொரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment