வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் ஆலயத்தின் உட்புறத்தில் பந்தற்கால் நாட்டுதல் நிகழ்வு இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் மரபினருக்கு காளாஞ்சி நிகழ்வு இடம்பெற்றது.
ஆலயத்தில் இருந்து மாட்டுவண்டில் மூலம் காளாஞ்சி எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கொடிசீலை உபயகாரரிடம் கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் ஆலய கணக்குபிள்ளையும் ஆலய பிரதம சிவச்சாரியரும் துணைக்குருவும் கலந்துகொண்டனர்.
ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் .ஆரம்பமாகவுள்ளது.
இந்த திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment