வல்லை இராணுவ முகாமுக்கு அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் தொடர்ந்தும் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.
வல்லை இராணுவ முகாமுக்கு அண்மையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இதில் இராணுவ சிப்பாய் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார்,இ ராணுவம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நீர்வேலிப் பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொ்லிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோப்பாய் பொலிஸாரால் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.இந்நிலையில் தற்போதும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் கட்டிப்பாட்டில் வைக்கப்பட்டு விசாரனைகள் இடம்பெற்றுவருகின்றன.
Post a Comment