கோண்டாவில் காரைக்கால் பகுதியில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு தரப்புக்கு இடையே நீடித்து வந்த மோதல் நேற்று இரவு வாள்வெட்டுச் சம்பவமாக மாறியதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
காரைக்காலைச் சேர்ந்த குழு ஒன்று மற்றொரு குழுவுக்கு நேற்று முன்தினம் தாக்கியுள்ளது என்று தெரியவந்துள்ளது.