புதுக்குடியிருப்பு மாற்றத்துக்கான இளையோர் அணி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
புதுக்குடியிருப்பில் நடந்த ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட புதுக்குடியிருப்பு மாற்றத்துக்கான இளையோர் அணி 4 ஆசனங்களை பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில் யாருக்கு தமது ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடி நேற்று வன்னி மாவட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர் சிவசக்தி ஆனந்தனுடன் இணைந்து புதுக்குடியிருப்பில் ஊடகங்களை சந்தித்து தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்தனர்.
Post a Comment