தென்மராட்சி வரணி வடக்கு தம்பான் கும்பிட்டான் குள பிள்ளையார் ஆலயத்தில் இருந்த ஐம்பொன் கலசம் உட்பட ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளது என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை நடந்த குறித்த களவு சம்பவத்தில் ஈடுபட்டவர் ஆலயத்தில் இருந்த கண்காணிப்பு கமெராவில் தெளிவாக இனங்காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.