கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மத்திய கிழக்கில் கடந்த மூன்று மாதங்களில் 23 இலங்கை தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஏழு பேரும், துபாய், அபுதாபி,குவைத், சவுதிஅரேபியா ஓமானில் ஏனையவர்களும் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இவர்களில் எத்தனைபேர் பணிப்பெண்கள் என்பது தெரியவில்லை என வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் குறித்த அச்சம் காரணமாக அந்தநாடுகளின் முறைப்படி இறுதிசடங்குகள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள அவர்உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்கள் அதற்கு சம்மதம்வெளியிட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment