வவுனியா ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த வைரமுத்து சிவகுமார் என்பவரே மரணமடைந்துள்ளார்.
இவரது மகன் சிவகுமார் ஜாதவகுமார் 2006 ஆம் ஆண்டு
கொழும்பு வெள்ளவத்தையில் பகுதியில் வைத்து கடத்தப்பட்டார்.
தனது மகனுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு கடந்த மூன்று வருடங்களாக தொடரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் தீவிரமாக உறுதியோடு போராடியவர் வைரமுத்து சிவகுமார்.
இதேவேளை இதுவரை நீதி கோரி போராடிவந்த 70 மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment