வெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாக அங்குள்ள எனது செய்தியாளர் கூறினார்.
கடந்த 3 தினங்களுள் அதிகளவான வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆராய்வதற்கு விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W. வீரகோன் குருநாகல் – மாவத்தகம பகுதிக்கு சென்றுள்ளார்.
கிருமிநாசினி பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.