கொடிகாமம் பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் நடந்த சண்டையை சமாதானப்படுத்த முற்பட்ட மனைவியின் தங்கையை கணவன் வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளார் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாமம் வெள்ளாம் பொக்கட்டி என்ற பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சில காலமாக பிரிந்துவாழும் கணவன், இன்று மாலை மனைவியை சந்தித்த்து வாக்குவாதப் பட்டிருக்கின்றார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அதனை அவதானித்த மனைவியின் தங்கை அங்கு சென்று சமரசத்துக்கு முயன்றதாகவும் அதனை அடுத்து கணவன் தான் வைத்திருந்த கத்தியால் குறித்த பெண்ணை சரமாரியாக வெட்டியதாக தமக்கு தகவல் கிடைத்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொடிகாமம் வெள்ளாம் பொக்கட்டி என்ற பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சில காலமாக பிரிந்துவாழும் கணவன், இன்று மாலை மனைவியை சந்தித்த்து வாக்குவாதப் பட்டிருக்கின்றார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அதனை அவதானித்த மனைவியின் தங்கை அங்கு சென்று சமரசத்துக்கு முயன்றதாகவும் அதனை அடுத்து கணவன் தான் வைத்திருந்த கத்தியால் குறித்த பெண்ணை சரமாரியாக வெட்டியதாக தமக்கு தகவல் கிடைத்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.