இதன்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்தும் 5 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்கள் புரிந்தவர்களும், நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்த முடியாத நிலையில் சிறைத்தண்டனை அனுபவித்துவந்தவர்களே இதன் போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவருக்கு மற்றொரு வழக்கில் தண்டனைக் காலம் நிறைவடையாததாகல் அந்தக் கைதி மீளவும் சிறையில் அடைக்கப்பட்டார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 31ன் கீழ் பெரும்குற்றங்களில் ஈடுபடாத கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.
அதன்படி, சிறு குற்றங்களில் தண்டனை பெற்ற நபர்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும், தண்டம் செலுத்த முடியாத கைதிகளுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார்.
இன்று விடுதலைசெய்யப்பட்டவர்கள் அனைவரும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதன் காரணமாக சிறைச்சாலை வாகனத்தில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்