யாழ்.வடமராட்சி பகுதியில் அத்துமீறி வீடுகளுக்குள் புகுந்து பொலிஸார் நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதலில் 3 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு குடத்தனை – மாளிகைதிடல் பகுதியில் உள்ள அம்மன் கோவிலடியில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபற்ற இச் சம்பவத்தில் பெண் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-
குறித்த பகுதியில் உள்ள வீடொ ன்றுக்குள் நேற்று வியாழக்கிழமை அத்துமீறி நுழைந்த பொலிஸார் கள்ள மண் ஏற்றியதாகவும், கன்ரர் வாகனத்தை எடுத்து செல்லப்போவதாக கூறியிருக்கின்றனர்.
இதனையடுத்து தாம் மணல் ஏற்றவில்லை. எனவும் வாகனத்தின் இயந்திரத்தில் சூடு இருக்கிறதா? என பார்க்குமாறு வீட்டிலிருந்த இளைஞர்கள் கூறிய நிலையில் விடாப்பிடியாக பொலிஸார் வாகனங்களை தாம் எடுத்து செல்லபோவதாக கூறினர்.
இதனையடுத்து பொலிஸாரின் அத்துமீறலை வீடியோ எடுத்துள்ளனர். இதனையடுத்து தொலைபேசியை பறித்துவைத்த பொலிஸார், கஞ்சாவை வைத்து வழக்குபோடுவோம் என அச்சுறுத்தியதுடன், வீடியோ வெளியே போககூடாது என அச்சுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து இன்று காலை அதே வீட்டுக்கு சென்ற பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர், பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என அனைவர் மீது மிருகத்தனமான தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
பெண் ஒருவரை காலால் மிதித்து அவர் மயங்கி விழும்வரை அடித்துள்ளனர். இந்நிலையில் 3 பேர் காயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இன்னும் பலர் காயமடைந்துள்ளபோதும். அவர்கள் அச்சத்தினால் தமது வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.
வடமராட்சி கிழக்கு குடத்தனை – மாளிகைதிடல் பகுதியில் உள்ள அம்மன் கோவிலடியில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபற்ற இச் சம்பவத்தில் பெண் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-
குறித்த பகுதியில் உள்ள வீடொ ன்றுக்குள் நேற்று வியாழக்கிழமை அத்துமீறி நுழைந்த பொலிஸார் கள்ள மண் ஏற்றியதாகவும், கன்ரர் வாகனத்தை எடுத்து செல்லப்போவதாக கூறியிருக்கின்றனர்.
இதனையடுத்து தாம் மணல் ஏற்றவில்லை. எனவும் வாகனத்தின் இயந்திரத்தில் சூடு இருக்கிறதா? என பார்க்குமாறு வீட்டிலிருந்த இளைஞர்கள் கூறிய நிலையில் விடாப்பிடியாக பொலிஸார் வாகனங்களை தாம் எடுத்து செல்லபோவதாக கூறினர்.
இதனையடுத்து பொலிஸாரின் அத்துமீறலை வீடியோ எடுத்துள்ளனர். இதனையடுத்து தொலைபேசியை பறித்துவைத்த பொலிஸார், கஞ்சாவை வைத்து வழக்குபோடுவோம் என அச்சுறுத்தியதுடன், வீடியோ வெளியே போககூடாது என அச்சுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து இன்று காலை அதே வீட்டுக்கு சென்ற பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர், பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என அனைவர் மீது மிருகத்தனமான தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
பெண் ஒருவரை காலால் மிதித்து அவர் மயங்கி விழும்வரை அடித்துள்ளனர். இந்நிலையில் 3 பேர் காயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இன்னும் பலர் காயமடைந்துள்ளபோதும். அவர்கள் அச்சத்தினால் தமது வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.