நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை மீறியமை குற்றச்சாட்டில் இதுவரை ஆயிரத்து 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக கடந்த 20 ஆம் திகதி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்போது அனுமதியின்றி பிரவேசித்த உந்துருளிகள், முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட 447 வாகனங்களை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் வீதிகளில் தேவையற்ற விதத்தில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லுவோருக்கு மாத்திரம் வீதியில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக கடந்த 20 ஆம் திகதி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்போது அனுமதியின்றி பிரவேசித்த உந்துருளிகள், முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட 447 வாகனங்களை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் வீதிகளில் தேவையற்ற விதத்தில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லுவோருக்கு மாத்திரம் வீதியில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.