கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் இன்று திங்கட்கிழமை குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் விசேட அதிரடிப் படையினரும், விமானப் படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை இன்று நடாத்தி வந்தனர்.
இதன் போது வீதியால் வந்த சந்தேகத்திற்கு இடமான வாகனம் ஒன்றினை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குண்டு வெடித்துள்ளது.
இக் குண்டு வெடிப்பு சம்பவத்தின் சேத விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.