யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் - முச்சக்கர வண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் உரும்பிராய் சந்தி, இலங்கை வங்கிக்கு அருகாமையில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
புன்னாலைக்கட்டுவன் யோகேந்திரன் தமிழரசன் (வயது-17) என்பவரே உயிரிழந்தார்.
அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்ததாகப் பொலிஸார் கூறினர். மற்றொரு இளைஞரும் முச்சக்கர வண்டிச் சாரதியும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மதுபோதையிலிருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார், அவரது மோட்டார் சைக்கிளிலிருந்து மதுப் போத்தல் ஒன்று மீட்கப்பட்டதாகவும் கூறினர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் உரும்பிராய் சந்தி, இலங்கை வங்கிக்கு அருகாமையில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
புன்னாலைக்கட்டுவன் யோகேந்திரன் தமிழரசன் (வயது-17) என்பவரே உயிரிழந்தார்.
அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்ததாகப் பொலிஸார் கூறினர். மற்றொரு இளைஞரும் முச்சக்கர வண்டிச் சாரதியும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மதுபோதையிலிருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார், அவரது மோட்டார் சைக்கிளிலிருந்து மதுப் போத்தல் ஒன்று மீட்கப்பட்டதாகவும் கூறினர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.