யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் நடந்த குடும்ப சண்டையை விசாரிக்கச் சென்ற பொலிஸ் அவலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து வந்த கணவருக்கும், மனைவிக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
பதிவான முறைப்பாட்டின்படி விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தரைப் பெண்ணின் கணவர் தாக்கியுள்ளார். சீருடையையும் கிழித்துள்ளார். தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்தார். அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து வந்த கணவருக்கும், மனைவிக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
பதிவான முறைப்பாட்டின்படி விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தரைப் பெண்ணின் கணவர் தாக்கியுள்ளார். சீருடையையும் கிழித்துள்ளார். தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்தார். அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.