வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தனின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாவகச்சேரி நகர்ப் பகுதிகளில் இன்று இரவு 10. 30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
காரை சாவகச்சேரி நகரில் தையல் நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைத்துவிட்டுச் சென்ற பின்னர் வேகக் கட்டுபாட்டை இழந்த மினிபஸ் கேசவன் சயந்தனின் காரை மோதித் தள்ளியது.
இதனால் கார் மிகப் பலத்த சேதமடைந்துள்ளது.